Archive for the ‘கட்டுரைகள்’

என்னுடைய அம்மம்மா அன்னமுத்து சொர்ணலிங்கம் (1914-2007)08.24.07

amm1.jpg

amm2.jpg

ammamma.jpg

அன்னமுத்து சொர்ணலிங்கம் (1914-2007)

அம்மம்மா! சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். ஒல்லியான உடல்வாகு. கம்பீரமான தோற்றம். கட்டியிருக்கும் பருத்தி சேலையை விட மிருதுவான தோல். பளபளக்கும் கண்கள். மேலுதட்டில் கொஞ்சம் வித்தியாசமாக கறுப்பு முடிச்சுப்போன்ற மரு. என்ன அவசர வேலையிலிருந்தாலும் ஏதேனும் கேள்வி கேட்டால் பொறுமையாகப் பதில் சொல்லும் பாங்கு. அண்டை அயலவர் ஊரார்களை நின்று நிதானித்து ஒரு சொல்லாவது பேச வைக்கும் கம்பீரமும் கனிவும் நிறைந்த முகம். இவைதான் அம்மம்மாவை நினைத்தால் எனக்கு இப்போதும் எப்போதும் மனதில் நிற்கும் சித்திரம்.

என்னுடைய ஆதர்ச பெண்களில் என்னுடைய அம்மம்மாவுக்கே முதலிடம். நாற்பது வயதுச் சொச்சத்திலேயே கணவரை இழந்துவிட்டாலும் தனியாளாக நின்று குடும்பத்தை வளர்த்தெடுத்தவர். புங்குடுதீவு-நடுவுத்துருத்தியில் பிறந்தவர், அம்மப்பா இறந்தபிறகு இறுபிட்டியில் 1950களில் தனியாளாக வீடு கட்டிக் குடிபுகுந்தார். வீட்டின் அமைப்பு, முக்கியமாக ஜன்னல்கள் கொஞ்சம் அடைசலாக இருப்பதைச் சொன்னபோது, வீடு கட்டியவர்கள் புதிய ஆட்கள் என்று சொல்லிப் பிறகு, அவர்களுக்கு மதிய உணவு நடுவுத்துருத்தியில் இருந்து தலையில் கடகத்தில் வைத்துச் சுமந்து வந்த கதையைச் சொன்னார். வீட்டிற்கு சொர்ணவாசா என்று அம்மப்பாவின் பெயரை வைத்திருந்தாலும் எனக்கென்னமோ அது இன்னமும் அம்மம்மாவின் வீடுதான்!

என்னுடைய சிறுபிராயத்து நினைவுகளிலெல்லாம் அம்மம்மாவுக்கு முக்கிய இடமிருக்கிறது. கொழும்பில் வசித்தபோது யாழ்ப்பாணத்துக்கு போறதுக்கு டிரெயின் ஏறிட்டா பயங்கரக் கொண்டாட்டம் எங்களுக்கு. இரவு நித்திரை கொண்டு எழும்பேக்க டிரெயின் வடக்க வந்திருக்கும். டிரெயினில இருந்து இறங்கிப் பிறகு காரில ஏறித்தான் வீட்டுக்கு, புங்குடுதீவுக்குப் போகோணும் எண்டு தெரியும். ஆனாலும் வழி நெடுக வாற வீட்டு வேலிகளையும் படலைகளை பார்த்துப்பார்த்து அதில எங்கட வீட்டுப் வேலியையும் படலையையும் ஒத்ததா எதையாவது கண்டிட்டா வீடு வந்திற்றுது எண்டு மனது சந்தோசப்படும். சில நேரங்களில வெளியில சொல்லித் திட்டு வாங்கிறதும் உண்டு. பிறகு உண்மையாவே யாழ்ப்பாணத்தில இறங்கி வண்டியில் புங்குடுதீவுக்குப் போய் இறங்கி, படலையைத் திறந்தண்டு உள்ள ஓடிப்போய் ‘அம்மம்மோய்!’ எண்டு கூச்சலிட்டண்டு ஓடிப்போய் கட்டிப்பிடிக்கிறது இப்பவும் நினைவில் நிற்கும் விசயம்.

எங்கட வீட்டு மாட்டுக்கெல்லாம் ‘அ’ என்று சூடு போட்டிருக்கும். சின்ன வயசில அரவிந்தனுக்கு அது தன்ர மாடு எண்டு சந்தோசம். தன்ர மாடுதானே எண்டு அவர் அம்மம்மாட்டக் கேக்கேக்க, ஓம் எண்டு சொல்லிருவா. எனக்குக் கோவம் கோவமா வந்தாலும் வேற கதைகள் சொல்லி கவனத்தை மாத்தி விட்டிருவா.

விடிய வெள்ளன முழிப்பு வந்திற்ற நான் முதல்ல போறது மாட்டுமால் பக்கந்தான். அப்பிடிப் போகாம படுக்கையிலயே கிடந்தண்டு உன்னிப்பாக்கவனிச்சா, அம்மம்மா கண்டுக்குட்டிய அவிட்டு விடுறதும். அது மாட்டிட்ட பால் குடிக்கிறது. கொஞ்ச நேரம் கழிச்சு கண்டுக்குட்டிய மாட்டுக்குப் பின்னால கட்டி விட்டுட்டு கையோட கொண்டு போன செம்பில இருந்த தண்ணி விட்டு அலம்பிட்டு பால் கறக்கத் தொடங்கிறதும் கேக்கும். சில நாட்களில கொஞ்சம் பிந்தி எழும்பிட்டா, சொய் சொய் எண்டு கறந்த பால் செம்பில விழுற சத்தம் கேக்கும். முந்தியே எழும்பி, மாட்டுமால் பக்கம் போனா படிக்கட்டிலயே இருந்து பாக்கச் சொல்லிச் சொல்லுவா.

கிடுகு பின்னச் சொல்லித்தந்தது. கொழும்பில இருந்து புங்குடுதீவுக்கு வந்து சேர்ந்தபோது முதன்முதலா பள்ளிக்கூடத்துக்குக் கூட்டியண்டு போனது. விக்கியைப் பள்ளிக்கூடத்தில விட்டுட்டு அம்மம்மா வாறதுக்குள்ள விக்கி வீட்டில நிக்கிறது. வீட்டுக்குப் பின்னால நிக்கிற மாமரத்தில ஏறி இருந்து புத்தகம் படிக்கிறது எனக்குப் பிடிச்ச பொழுதுபோக்குகளில ஒண்டு. மாம்பழ சீசனில, மத்தியான நேரத்தில அம்மம்மாவிட்ட முன்னுக்கும் பின்னுக்கும் அலைஞ்சு கெஞ்சிக் கேட்டா ஒரு தட்டில மிளகாய்த்தூளையும் உப்பையும் கலந்து கூடவே மாங்காயையும் வெட்டித் தருவா. அம்மாவுக்குத் தெரிஞ்சா பேசுவா எண்டு சொல்லிக்கொண்டே தந்தாலும், அடுத்த நாள் போய்க்கேக்கும்போதும் அப்படியே வெட்டித் தருவா அம்மம்மா.

கோயில் திருவிழா நேரம் கச்சானுக்குக் காசு தாறது. வேப்பம்பூ பூக்கிற காலத்தில கொக்கச்சத்தகத்தோட பூ புடுங்கிறது. நடுவுத்துருத்திக்கு குறுக்கு வழியால நடந்து போறது. போற வழியில கதைக்கிற கதைக்கெல்லாம் ஈடு கொடுத்துக் கதைச்சண்டு வாறது. இரவில அரிக்கன் லாம்போட போய் படலையைக் கட்டிட்டு வாறது எண்டு என்னுடைய ஊர் நினைவுகளெல்லாம் அம்மம்மாவைச் சுற்றியே பின்னப்பட்டிருந்தன. நினைவலைகள் என்று என்னுடைய வலைப்பதிவில் நான் எழுதியிருக்கும் இருபத்திச் சொச்சம் கட்டுரைகளிலும் அம்மம்மா ஏதாவது வடிவத்தில் இடம்பெற்றிருக்கிறார் என்பதை இப்போதுதான் கவனிக்கிறேன்.

நாங்கள் சென்னைக்குச் சென்று எனக்கு அங்கே நண்பர்கள் உருவாகியபோதும் அவர்களிடம் அம்மம்மாவைப் பற்றி அளந்துவிடுவதுண்டு. அது சிற்சில சமயங்களில் ‘எங்கப்பா சிற்றெறும்பின் தோல் வைச்சு ஆகாயத்தின் ஓட்டை அடைத்தவர்’ அளவுக்கு இருந்தாலும் என் நண்பர்களிடையேயும் அம்மம்மா பிரபலமாகியிருந்தார். அம்மம்மா கடல் வழியாக மண்டபத்துக்கு வந்து அங்கிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தபிறகு என்னுடைய நண்பர்கள் பலரும் வந்து அம்மம்மாவைப் பார்த்துப்போன அளவிற்கு அம்மம்மா பிரபலமாக இருந்தார்.

சென்னைக்கு வந்தவரிடம் அவருடைய சிறுவயது நினைவுகளைச் சொல்லச் சொல்லிக் கேட்டபோது அவர் சொன்னவற்றில் முக்கியமான விசயம். அம்மம்மா சின்ன வயதில் படு குழப்படி என்பது! அக்கா தங்கையுடன் மூவராகப் பிறந்த இந்தச் சகோதரிகளின் தாயார் சிறுவயதிலேயே இறந்துவிட்டாராம். தந்தையின் கவனிப்பில் வளர்ந்தவர்கள் வீட்டு வளவு முழுக்க அலைந்து திரிந்து விளையாடி வளர்ந்திருக்கிறார்கள். நடுப்பிள்ளையாக இருந்தாலும் பெரும்பாலான யோசனைகள் அம்மம்மாவிடமிருந்தே வந்திருக்கின்றன. அப்போது அவர்களின் உடை, ‘சிற்றாடை’ என்று சொல்லப்படும் உடையாக இருந்திருக்கிறது. சீர்காழி கோவிந்தராஜன் ‘சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடையுடுத்தி, சிவகங்கைக் குளத்தருகே ஸ்ர்துர்கை சிரித்திருப்பாள்’ என்ற பாடல் வரிதான் அம்மம்மா இதைச் சொல்லும்போது என் மனதில் ஓடியது. தான் சரியான குழப்படி என்று சொல்லிய அம்மம்மாவிடம் ஆச்சரியமாக, ‘குழப்படியா. எங்களுக்குத் தெரியாதே. என்ன குழப்படி செஞ்சிருக்கிறீங்க’ என்று நாங்கள் கேட்டபோது அம்மம்மா சிரித்தார். மாரி காலத்தில் கிணறுகளெல்லாம் நிரம்பிக் கிடக்கும்போது ஆட்டுக்குட்டியொன்றைப் பிடித்து வந்து வளவின் மூலையில் இருக்கும் கிணற்றுக்கு அருகில் நின்றபடி ஆட்டுக்குட்டியில் இரண்டு கால்களையும் பிடித்தபடி ஆட்டுக்குட்டியைத் தோய்த்தெடுப்பது தங்கள் வேலையென்றார். ஆட்டுக்குட்டியும் தன்பாட்டுக்கு கதறுமென்றும், அந்தச் சத்தம் கேட்டு இவர்களின் அப்பா வந்து பார்த்துவிட்டு தங்களையெல்லாம் அடிப்பதற்குத் துரத்துவாரென்றும். பிடிபடாமல் தாங்களெல்லோரும் ஓடித்தப்புவதாகவும் சொன்னபோது உண்மையாகவே அம்மம்மா குறும்பான ஆள்தான் என்று தோன்றியது.

ஒவ்வொரு வருடமும் தைப்பொங்கலின்போது பெரிய வாசலுக்கு முன்பு சிறிதாக கோலம் வரைந்து பானை வைத்து பொங்கல் வைப்போம். எல்லோரும் சுற்றி நின்று பொங்கலோ பொங்கல் என்று கூவி பொங்கி முடித்ததும் சுவாரசியமான அடுத்த கட்டம் தொடங்கும். பொங்கற் சாமான்களோடு வாங்கி வந்திருந்த வெடிகளை வெடிக்கும் வேளையே அது. சென்னையில் தீபாவளி சமயம் பலரும் கையில் வைத்து வெடிக்கும் ‘புஜிலி’ இரக வெடிகள்தான் அவை. ஆனாலும் பயங்கர ஆயத்தம் நடக்கும். தேங்காய் மட்டையில் கொஞ்ச நாரும் வைத்து திரி கிள்ளப்பட்ட வெடி பாங்காட வைக்கப்படும். நீண்ட குச்சியொன்று பொங்கல் அடுப்பில் வைக்கப்பட்டுத் தயாரா இருக்கும். அந்தக் குச்சியை தூஊஊஊர நின்று வெடியின் திரியில் முட்டுமாறு அம்மம்மா வைப்பா. குச்சி திரியில் பட்டுக்கூட இருக்காது. துள்ளியடித்தபடி தூர ஓடி விடுவா. நாங்களெல்லாம் மூச்! படியில் நின்றுதான் பார்க்க வேண்டும். பிறகு நினைத்து நினைத்துச் சிரிக்கும் விசயம் இது.

இன்னொரு அனுபவமும் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதலாம் தேதியன்று ஏதேனும் புதிய விசயங்களைப் புழுகி எல்லோரையும் நம்ம வைத்துவிடுவார். சமயத்தில் அன்றைக்கு ஏப்ரல் முதலாம் தேதி என்று நினைவு வந்தாலும் அவர் சொல்லும் விதமும் உடலசைவுகளும் நம்மை நம்ப வைத்துவிடும். ஒருமுறை அவர் ஓட்டமும் நடையுமாக வந்து, இவன் லலித் அத்துலத் முதலியை கொண்டுட்டாங்கள் என்று விரிவாக கதை சூடிச் சொன்னார். அதற்கு முந்தைய வருடமும் அம்மம்மாவால் ஏமாற்றப்பட்டிருந்தும் அம்மா, அன்ரி எல்லோரும் விழி அகல கேட்டுக்கொண்டார்கள். வீட்டிற்கு வருபவர்களிடமும் சொன்னார்கள். அம்மம்மா எதுவுமே சொல்லவில்லை. எல்லா விவாதங்களிலும் கலந்துகொண்டார். பொழுது சாயும் நேரத்தில்தான் தான் சொன்னது புழுகு என்று சொல்லி எல்லோரையும் முட்டாளாக்கினார்!

இதிலே இன்னொரு விசயமும் சொல்ல இருக்கு. அம்மம்மா பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி இருந்தாலும் பரந்த உலக அறிவு கொண்டவர். அரசியல் மிகவும் பிடித்த விசயம் இவருக்கு. சென்னையில் வீட்டுக்கு வரும் தினமணி இதழை முதற்பக்கத்தில் இருந்து கடைசிப்பக்கம் வரை ஒன்று விடாமல் வாசித்து, ஆள் கிடைத்தால் விவாதித்தபடி இருப்பார். தமிழக அரசியலையும் விட்டு வைக்கவில்லை அவர். அறுபதுகளில் ஒவ்வொரு ஊரிலிருந்து ஆட்கள் போய் நடத்திய போராட்டத்திலும் அம்மம்மா பங்குபற்றி இருக்கிறார் என்று அப்பா சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. விழிப்புணர்வும் போராட்ட குணமும் கொண்ட மனு்ஷியாக இருந்திருக்கிறார் இல்லையா!

தன்னுடைய உடமைகளை முதியோர் இல்லத்துக்குக் கொடுக்கச் சொல்லியிருக்கிறாராம் அம்மம்மா. விக்கி சொன்னாள். வித்தியாசமான ஆள் என்பதைக் கடைசிவரையிலும் நிரூபித்திருக்கிறார் அம்மம்மா.

எப்படிப்பட்ட மனு்ஷி இவர்!

Posted in அனைத்து இடுகைகள், கட்டுரைகள், நினைவலைகள்with Comments Off

வாசக அனுபவம்: The House of Blue Mangoes - David Davidar08.20.07

house_of_blue_mangoes.jpg

எனக்கு சரித்திரம் ரொம்பப் பிடிக்கும். பழைய கதைகள் கேட்பது அதைவிடப் பிடிக்கும். மன்னர்கள், அதிகாரவர்க்கத்தவர்களின் சரித்திரங்களே பெரும்பாலும் பல விதங்களில் பதிவு செய்யப்படுகின்றன என்றாலும் அவற்றையும் வாசிக்கப்பிடிக்கும். அதைவிட நேரிலும் இணையத்திலும் சந்திப்பவர்களிடம் ‘அந்தக் காலக்கதைகளைச் சொல்லச்சொல்லியும் எழுதச் சொல்லியும் நச்சரிக்கவும் பிடிக்கும். சமீபத்தில் Carlo Ginzburg எழுதிய ‘The Cheese and the Worms: The Cosmos of a Sixteenth-Century Miller’ என்ற புத்தகம் தற்செயலாக வாசிக்கக்கிடைத்தது. கொஞ்சம் ஆங்காங்கே இழுவையாக இருந்தாலும் குடியானவன் ஒருவனின் பார்வையில் என்ற விதயம் இழுத்துப்பிடித்தது.

ஊர் உலகமெல்லாம் அலைந்து திரிந்தாலும் சொந்த ஊருக்குப்போய் கொஞ்ச நாளாவது பழஞ்சோறு சாப்பிட்டுப்பார்க்க ஆசை வருமே. அதுமாதிரி நம்ம ஊர் விசயங்களை ஆங்கிலத்தில் படிக்கக்கிடைக்காதா என்ற ஆசை சில காலமாக இருந்தது. அந்த ஆசைக்குத் தீனி போட்டது டேவிட் தாவிதரின் (David Davidar) ‘The House of Blue Mangoes’ நாவல்.

கதை தமிழ்நாட்டை, குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் தென் தமிழ்நாட்டைக் களமாகக் கொண்டது. துரைபுரம், செவத்தாறு, புளிமேடு, கீழநாடு என்று கற்பனையில் உருவாக்கப்பட்ட ஊர்களென்றாலும், இந்தப் பிரதேசம் வடக்கின் திருநெல்வேலி மாவட்டத்தையும் கிழக்கில் வங்காளவிரிகுடாவையும் தெற்கில் கன்யாகுமரியையும் மேற்கில் திருவாங்கோடு சமஸ்தானத்தையும் எல்லைகளாகக் கொண்டது என்று ஆசிரியர் குறிப்பில் கூறப்படுகிறது. செவத்தாறு தாமிரபரணியாற்றின் கிளைகளில் ஒன்றாகச் சித்தரிக்கப்படுகிறது.

இடங்களை மட்டும் கற்பனையாகப் படைக்கவில்லை ஆசிரியர். செவத்தாறு நீலம் என்ற புது மாம்பழ வகையையும் ஆண்டவர் (Andavar - ஆண்டவன் சுவாமிகளுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் ஆசிரியர்), வேடர் (Vedhar - not to be confused with Vedars, Vetans, Veduvars, etc - David Davidar), மருதர் என்று மூன்று புதிய சாதிகளையும் உருவாக்கி உலவ விடுகிறார். நூற்றாண்டுக்கணக்காகத் தொடரும் சாதிப்பிரச்சினையில் புதிய பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என்றுதான் இந்தப் புதிய சாதிகளை உருவாக்கியதாக ஆசிரியர் கூறுகிறார். எனினும் பண்புகள் ஏற்கனவே இருக்கும் பிரிவுகளில் இருந்தே எடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்.

செவத்தாறு அல்லது Chevathar என்ற இடத்தை வாழ்விடமாகக் கொண்ட ஒரு கிறிஸ்தவ குடும்பத்தின் மூன்று தலைமுறைகளைத் தொடருகிறது ‘The House of Blue Mangoes’. ஏறக்குறைய இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கி இந்தியா சுதந்திரம் அடைவதற்குச் சில வருடங்களுக்கு முன் முடிகிறது.

செவத்தாறு கிராமத்தின் தலைவர் சோலமன் துரை முதலாவது தலைமுறையைச் சேர்ந்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழும் சாதி-சமூக மாற்றங்களின் குழப்பங்களை எதிர்கொள்பவர். இந்தப் பகுதியில் இலேசாக தோள்சீலைப் போராட்டத்தைப்பற்றியும் சொல்லிச் செல்கிறார் டேவிட் தாவிதர். சோலமன் துரையின் இரண்டு மகன்களில் இளைய மகன் ஆரோன், இந்திய விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுக்கிறான். மூத்த மகன் டானியல், மருத்துவத்துறையில் ஈடுபட்டு சில கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அதனூடாக குடும்பத்தைத் தக்க வைத்துக்கொள்கிறான். டானியலின் மகன் கண்ணன், தாம்பரம் கிறிஸ்தவக்கல்லூரியில் படித்துவிட்டு ஆங்கிலோ இந்திய மனைவியுடன் கேரள தேயிலைத்தோட்டமொன்றில் வேலைக்குச் சேர்கிறான். சோலமன் துரை - டானியல் - கண்ணன் என்ற இந்த மூவரையும் மையமாக வைத்துக் கதை பின்னப்படுகிறது.

சிற்சில இடங்களில் கொஞ்சமே கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் பழக்கமான இடம், தெரிந்த மக்கள், சுவாரசியமான சம்பவங்கள் என்று தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. ஆரோனின் இந்தியப் போராட்ட அனுபவம் மிக மிக சுவாரசியமானது. சில நுண்ணரசியல்களையும் தொட்டுப்போனது. ஆரோன் சிறையில் அனுபவித்த கொடுமைகள் இலங்கையில் சாதாரண மக்கள் பிடிக்கப்பட்டு விசாரிக்கப்படுவதையும் சிறையில் அனுபவிக்கும் துன்பத்தையும் நினைத்துப் பார்க்க வைத்தன. சண்டைபோட்டுக்கொண்டே ் அந்த நாட்டின் பாஸ்போர்ட் தானே வைத்திருக்கிறீர்கள் என்று ஒற்றை வாக்கியத்தில் முடக்கப்படும் வேதனையையும் நினைத்துப் பார்க்க வைத்தது. அல்ஜீரிய நாட்டு விடுதலைப்போரின் போது பிரான்ஸ் பல்வேறு வகையான சித்திரவதைகளைப் பயன்படுத்தியதும் நினைவில் வந்துபோனது. ஓக்கே. இங்கே நிறுத்திவிட்டு புத்தகத்தைப்பற்றிப் பேசுவோம்.

பெண்களைப்பற்றி ஒன்றுமே பேசாமலில்லை டேவிட் தாவிதர். சோலமன் துரையின் மனைவி சாரிட்டிக்கு (Charity) முக்கியமான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அதுவுமே சமையல் சாப்பாட்டோடு நின்று போகிறது. பெருமளவு மற்ற விதயங்களில் தொடரவில்லை. அந்தக் காலத்தில் பெண்களின் நிலை இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கிறேன்.

தமிழ்நாட்டை மையமாக வைத்து ஆங்கிலத்தில் நாவல்கள் ஏதேனும் வந்திருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. அப்படி ஏதேனும் நாவல்கள் வந்திருந்தால் சொல்லுங்கள். படிக்க ஆர்வமாகவிருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தில் கண்ட சுவாரசியமான விதயம். ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் தமிழ்ச் சொற்கள். பக்கத்தின் அடிப்பகுதியிலோ, புத்தகத்தின் கடைசியிலோ பொருள்விளக்கம் கூடக் கொடுக்கப்படாமல் இந்தத் தமிழ்ச்சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பென்குவின் இந்தியா பதிப்பகத்தின் பொறுப்பாளராகப் பணிபுரிந்து விக்ரம் சேத், அருந்ததி ராய், ரோஹின்டன் மிஸ்ட்ரி போன்றவர்களின் புத்தகங்களைப் பதிப்பித்தவர். இவர் இப்படிச் செய்வதற்கு விசேட காரணங்கள் இருக்க வேண்டும்! அதைப்பற்றிப் புத்தகத்தில் குறிப்புகள் ஏதும் இல்லை. அல்லது, நான் படித்த வெளியீட்டில் விடுபட்டுப் போய்விட்டதா தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

கதை தொடங்கிய முதல் பக்கத்திலேயே Vakeel Perumal என்ற பாத்திரம் வருகிறது. அடுத்த பக்கத்தில் சிறுமியொருத்தி அக்கா என்று இன்னொருத்தியைக் கூப்பிடுகிறாள். இப்போது புத்தகத்தைப் புரட்டியபோது கண்ணில் பட்ட வார்த்தைகள் சில: lungi, aiyo amma, vanakkam, thalaivar, chithappa.

இந்தப் புத்தகத்தின் அத்தியாயம் ஒன்றினை இங்கே தட்டச்சிட்டிருக்கிறேன்.

மொத்தத்தில் எனக்குப் புத்தகம் பிடித்திருந்தது.

ஆசிரியர் குறிப்பையும் அவர் கொடுத்திருந்த புத்தகப் பட்டியலையும் என்னுடைய பாவனைக்காக இங்கே சேமித்து வைக்கிறேன்.

The House of Blue Mangoes - David Davidar

One of my reasons for writing this book was to recapture memories of an idyllic childhood spent in places like the high tea country in Peermade, where my father worked, and my grandparents’ homes in Nagercoil and Padappai. Also, my paternal grandfather Ambrose established a family settlement and this seemed such a splendid achievement that it marked the point of departure for my novel. Howver ‘The House of Blue Mangoes’ is wholly invented. It is not autobiographical nor is it in any way family history masquerading as fiction. Solomon, Daniel, Aaron, Kannan and hte rest of the Dorai clan are people I’ve imagined and bear no resenblance to anyone I know. The same is true of Doraipuram, Chevathar, Pulimed and Kilanad district

For those, who are interested in a little more information about these places, I can do no better than recapitulate my notes on them when they were first visualized. Kilanad is the smallest district of Madras Presidency, so small that in 1899 it had only two revenue sub-divisions or taluqas (one less than the next smallest, the Nilgiris district, which had three at the time). Shaped like a notched arrowhead, Kilanad’s northern boundary is Tinnevelly district (now Tirunelveli); to the west lies the kingdon of Travancore (now the state of Kerala). It’s rimmed to the east by the Bay of Bengal and to the south it narrows to the point two kilometres short of Cape Comorin (Kanyakumari). The Chevathar, a non-existent tributary of the mighty Tamraparani, bisects the district before existent tributary of the mightly Tamraparani, bisects the district before debouching into the Bay of Bengal near the village that bears its name.

One further paragraph will suffice to encapsulate Kilanad’s main points of interest. IT has an area of 489 sq. miles with a maximum width of sixty-five miles and length of eighty-six miles, with three towns, forty=eight villages and a total population of one hundred and fity-three thousand. ITs chief town is Melur, with a population of eighteen thousand and ninety-nine on a Nanguneri-Nagercoil highway. It is where the Collector is based; it has big Mariamman temple and a famous cattle fiar is helnd there twice a year. The second biggest town, Ranivoor population fifteen thousand two hundred and fifty), the headquarters of the second of the two taluqas, is almost equidistant between the district headquarters and the only other town in the district, Meenakshikoil on the coast. Ranivoor is famous throughout the district for a church dedicated to St Luke that is supposed to have miraculous powers of exorcism. Meenakshikoil, which became the headquarters of the taluqa of the same name early in the twentieth century, had an eighteenth-century temple dedicated to the Goddess Meenakshi built by Kulla Marudu, the last feudal lord of the area. Predating the Meenakshi temple is a small Murugan temple across the river in Chevathar village.

The entire district is sparsely populated and musters the lowest revenues in the Presidency. The chief cash crops are cotton, to the north, and palmyra products, jaggery, arrack, baskets and mats - these last are famous throughout the Presidency.

Of Pulimed, across the bordern in the central Travancore hills, there is little to add, except that it’s an imaginary tea-planting district between Peermade and Vandiperiyar

A word about some of the caste groups in the book. The Andavars (who bear no resemblance whatsoever to the contemporary followers of Andavan Swamigal, among others), Vedhars(not to be confused with Vedars, Vetans, Veduvars, etc.) and Marudars do not find a place among the hundreds of castes and sub-castes exhaustively surveyed by the Anthropological Survey of India int the People of India project, compiled and published in thirteen voilumes by K.S.Singh (OUP, 1997). I invented three new casts because I did not wish to add fuel to the caste controversies that have raged for centuries now, to the general detriment of the country and the states of Tamil Nadu and Kerala which are my particular interest. All that needs to be said here is that the three casts share similarities with some of the non-Brahmin castes in the South.

Most of the historical incidents and personages to be encountered in the narrative are well-known and need little by way of explication. The only one that needs comment is the murder of Robert William d’Escourt Ashe. His assassination is a historically documented fact. Among the convicted of his murder were Neelakantha Brahmachari and Venchi Iyer. Aaron Dorai wasn’t one among them.

Finally, I should point out that I’ve retained spelling from the period in which the novel is set - Tinnevelli for Tirunelveli, Madura for Madurai, Madras for Chennai and so on.

-0-

On Village Life:
The Remembered Village by M.N. Srinivas (OUP, 1976)
Fluid Signs: Being a Person the Tamil Way by E.Valentine Daniel (University of California Press, 1984)
Siva and her Sisters by Karin Kapadia (OUP, 1996) [excellent descriptions of ritual possession by villages].

On The Historical and Sociological Aspects of South India:
Peasant History of South India by David Ludden (OUP, 1989)
The Politics of South India, 1920-1937 by Christopher John Baker (Vikas, 1976)
Politics and Social Conflict of South India by Eugene F. Irschick (OUP, 1969) [Particularly good on caste conflict]
Land and Caste in South India by Dharma Kumar (Manohar, 1992)

On Siddha Medicine:
Siddha Medicine by Dr. Paul Joseph Thottam (Penguin, 200)

Tea Planting:
A Planting Century by S. Muthiah (East-West, 1993) [Comprehensive history of the tea planting industry]

Posted in அனைத்து இடுகைகள், கட்டுரைகள், வாசக அனுபவம்with 8 Comments →

மாஹேர் அராரும் கனேடிய அமெரிக்க அரசுகளும்: தொடரும் குழப்பங்கள்02.01.07

மாஹேர் அரார். தீவிரவாதிகளோடு தொடர்பு வைத்திருப்பவரென்று கனேடிய அரசு கொடுத்த தகவலினடிப்படையில் 2002ம் ஆண்டு நியூயார்க் விமானநிலையத்தில் கதைசெய்யப்பட்டு சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அப்பாவி. இவரைப்பற்றி எழுதிய இடுகை இங்கே.

போன வெள்ளிக்கிழமை (ஜனவரி 26, 2007) கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் கனேடிய அரசின் சார்பில் மாஹேர் அராரிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். மன்னிப்புக்கேட்டதோடு 10.5 மில்லியன் கனேடியன் டாலர்களையும் கொடுத்திருக்கிறார்.

மாஹேர் அரார், தொடக்கத்தில் கனேடிய அரசிடம் 400 மில்லியன் டாலர் கேட்டு வழக்குத் தொடுத்திருந்தார். பிறகு அத்தொகையை 37 மில்லியன் டாலர்களாகக் குறைத்துக்கொண்டார். அத்தொகைதான் இப்போது 10.5 மில்லியன் டாலர்களாக வந்து நிற்கிறது. மாஹேர் அரார் வழக்குப்போடுவதற்குச் செலவழித்த தொகையையும் சேர்த்து ஏறக்குறைய 12.5 மில்லியன் டாலர்களைக் கனேடிய அரசு கொடுக்குமென்று தெரிகிறது.

இழைக்கப்பட்ட நீதிக்கு இந்தப் பிச்சைக்காசு எந்த மூலைக்கு என்பது ஒரு பக்கமிருக்க, கனேடிய பிரதமராக ஸ்டீபன் ஹார்பர் மன்னிப்புக் கேட்ட விதத்தைப் பாருங்கள்.

Dear Mr. Arar:

On behalf of the Government of Canada, I wish to apologize to you, Monia Mazigh and your family for any role Canadian officials may have played in the terrible ordeal that all of you experienced in 2002 and 2003.

Although these events occurred under the last government, please rest assured that this government will do everything in its power to ensure that the issues raised by Commissioner O’Connor are addressed.

I trust that, having arrived at a negotiated settlement, we have ensured that fair compensation will be paid to you and your family. I sincerely hope that these words and actions will assist you and your family in your efforts to begin a new and hopeful chapter in your lives.

Yours sincerely,

கனேடிய அரசாங்கத்தின் அங்கமான RCMP மாஹேர் அரார் விதயத்தில் தவறாக நடந்துகொண்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய 11 மில்லியன் டாலர் செலவில் ஒரு விசாரணைக் கமி்ஷன் அமைத்து, அந்த விசாரணைக்கமி்ஷனின் அறிக்கையின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் சூடான விவாதங்கள் பல நாட்கள் நடந்து, தவறுகள் ஒப்புக்கொள்ளப்பட்டு, கடைசியில் பல மாதங்களுக்குப்பிறகு இசகுபிசகாக மாட்டிக்கொண்ட RCMPயின் தலைமைக் கமி்ஷனர் பதவியை விட்டிறங்கியது என்று எல்லாமே மக்களின் பார்வைக்கு முன்னால் நடந்து முடிந்திருக்கிறது. இதற்குப் பிறகும் கனேடியப் பிரதமராலும் அரசினாலும் முழுமையாகச் சொல்லி மன்னிப்புக் கேட்க முடியவில்லை. for any role Canadian officials may have played என்று இடையில் சொருகியிருக்கிறார்கள்.

இதோடு கவனிக்க வேண்டிய இன்னொரு விதயம். கனேடிய அரசு, மாஹேர் அரார் போட்டிருந்த வழக்கில் கேட்டிருந்த பணத்தொகை பற்றிய கொடுக்கல்/வாங்கல் பிரச்சினைகள் முழுவதும் முடியும்வரை காத்திருந்திருக்கிறது. கடிதத்தின் தொனியும் எங்கே முழுப் பொறுப்பையும் ஒப்புக்கொண்டால் இன்னும் அதிகமாகப் பணம் கேட்பானோ என்று பயந்திருந்ததைத்தான் காட்டுகிறது.

இது இப்படியென்றால் அமெரிக்க அரசின் இலட்சணம் சுத்தம்! கனேடிய அரசு கொடுத்த தகவல்களினடிப்படையில் கைது செய்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் சிரியாவுக்கு சித்திரவதை செய்யப்படுவார் என்று தெரிந்தும் அனுப்பத் தெரிந்தவர்களுக்கு, செய்த தவறை ஒத்துக்கொள்ள முடியவில்லை. என்ன காரணம்? அதே பணந்தான்.

கனேடிய அரசு, மாஹேர் அரார் நிரபராதி என்று செய்தி அனுப்பிய பிறகும், கடந்த டிசம்பர் 20, 2006இல் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்.

“With respect to some issues, we’re going to have to respectfully but firmly go our own way and the Arar matter, at least for now, is one of those,” Paul Rosenzweig, acting assistant secretary for international affairs for the Department of Homeland Security, tells reporters in Washington.

“As for the sharing of information with the Canadian government, while I do recognize that in an idealized world, we would share every bit of intelligence information with all of our partners. In the real world, that is an idealization that isn’t achievable.”

In response, Harper tells Sun Media that “as near as I can see, we simply have a U.S. government that won’t admit it’s wrong.”

அடுத்த நாள், வா்ஷிங்கன் டி.சியில் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் பீட்டர் மாக்கேவைச் சந்தித்த காண்டலீஸா ரைஸ், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மாஹேர் அராரின் விதயத்தைப் பரிசீலனை செய்வார்கள் என்று போகிற போக்கில் சொல்லிப்போகிறார்.

ஏறக்குறைய மூன்று வாரங்களுக்குப் பிறகு ஜனவரி 18, 2007 அன்று கனேடிய உள்ளுறவுத் துறை அமைச்சர் ஸ்டொக்வெல் டே, அமெரிக்க அரசு சேர்த்து வைத்திருக்கும் மாஹேர் அரார் குறித்த விதயங்களைப் பார்க்கிறார். பார்த்தபிறகு ஸ்டொக்வெல் டே, அந்தக் கோப்பில் இருக்கும் விதயங்கள், அமெரிக்கா மாஹேர் அராரை கண்காணிப்புப் பட்டியலில் வைத்திருப்பதற்கு ஏதுவானதாக இல்லை என்று சொல்கிறார்.

அன்றைக்கே வேர்மொண்ட் மாநில செனட்டரும் Senate Judiciary Committeeயின் தலைவருமான பாட்ரிக் லேஹி, மாஹேர் அராரை அமெரிக்க அரசாங்கம் நடாத்திய முறை குறித்து விரிவாக விசாரணை செய்யவிருப்பதாக அறிவிக்கிறார். அருகிலிருக்கும் கனடாவுக்கு அனுப்பாமல் தூரத்திலிருக்கும் சிரியாவுக்கு அனுப்பியதைப்பற்றிச் சொன்னதும் அதற்கு அமெரிக்க அட்டர்னி ஜெனரல் கொன்சாலஸ் சொன்னதுமென்று அவர்கள் பேசிக்கொண்டது பின்வருமாறு:

Senator Patrick Leahy has lambasted the US’s removal of Mr. Arar to Syria as absurd and outrageous, noting that instead of sending Mr. Arar a “couple of hundred miles to Canada and turned over to the Canadian authorities… he was sent thousands of miles away to Syria.” Senator Leahy spoke at length on the matter, calling the case “a black mark” on the United States: “We knew damn well, if he went to Canada, he wouldn’t be tortured. He’d be held. He’d be investigated. We also knew damn well, if he went to Syria, he’d be tortured. And it’s beneath the dignity of this country, a country that has always been a beacon of human rights, to send somebody to another country to be tortured.”[12]

Attorney General Gonzales noted that the United States had assurances from Syria that Mr. Arar would not be tortured. This was dismissed by Leahy, remarking that the United States got “Assurances from a country that we also say, now, we can’t talk to them because we can’t take their word for anything?” The Senator was alluding to the Bush Administration’s labelling of Syria as a member of the “axis of evil” and its policy of refraining from talking to Iran and Syria.

விரிவாக இங்கே

ஜனவரி 22, 2007: அமெரிக்க அரசின் கண்காணிப்புப் பட்டியலில் மாஹேர் அரார் தொடருவாரென்று Homeland Security Secretary Michael Chertoff-உம் Attorney General Alberto Gonzales-உம் கனேடிய அமைச்சர் ஸ்டொக்வெல் டேக்கு அனுப்பிய கடிதத்தில் சொல்கிறார்கள்.

தொடர்ந்து ஜனவரி 24, 2007இல் கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் டேவிட் வில்கின்ஸ், அமைச்சர் ஸ்டொக்வெல் டே தொடர்ந்தும் அமெரிக்க அரசினை வலியுறுத்துவதைக் கண்டிக்கிறார். அமெரிக்கா யாரை உள்ளே விடுவது விடக்கூடாது என்பதையெல்லாம் சொல்வதற்கு இவர் யார் என்ற ரீதியில் போகிறது தூதுவரின் பேச்சு.

U.S. Ambassador David Wilkins fires back at Public Safety Minister Stockwell Day for Day’s insistence that Arar be removed from the U.S. watch list. “It’s a little presumptuous of him to say who the United States can and cannot allow into our country,” Wilkins says at a news conference. “Canadian officials would rightly never tolerate any American official dictating to them who they may or may not allow into their country.”

மாஹேர் அரார் விதயத்தில் அரைகுறை மனதோடாவது கனேடிய அரசு ‘தொட்டுக்கோ துடைச்சுக்கோ’ பாணியில் மன்னிப்புக் கேட்டு முடித்துக்கொண்டுவிட்டது. ஆனால், அமெரிக்க அரசு இன்னமும் இணுங்குப் பிடியில் தொடர்கிறது. இது, கனேடிய-அமெரிக்க உறவில் சிறு விரிசலை ஏற்படுத்தியுமிருக்கிறது. இந்த விதயத்தில் கனேடிய அரசு, அமெரிக்க அரசைத் தொடர்ந்து விடாப்பிடியாக வலியுறுத்தி வருவது ஆச்சரியமாகவே இருக்கிறது. ம்ம்ம்.. உள்ளுக்குள் இருக்கும் cynic அவ்வப்போது இதுவும் ஒரு கண்துடைப்புதானோ என்று கேட்டாலும், அப்படியொன்றுமிருக்காது என்றும் மனது சமாதானம் சொல்கிறது.

மாஹேர் அரார் விதயத்தில் அமெரிக்க அரசு நடந்து கொள்ளும் முறை பற்றி ஜேனர் பாக்னெல் எழுதிய பத்தி:
Maher Arar is a victim of ‘immoral’ U.S. policy - Janet Bagnall

Posted in அனைத்து இடுகைகள், கட்டுரைகள், நாட்டுநடப்புwith 2 Comments →

  • You Avatar
    -


Creative Commons License