செம்பருத்தி.. செம்பருத்தி.. • 05.22.07








பூக்கண்டுகள் வாங்கிறதுக்காகப் போனபோது எடுத்த படங்களைத்தான் மேல பாக்கிறீங்கள். இத்தனை விதவிதமான செம்பருத்திகளைக் கண்டாலும், ஊரில இருந்த சின்ன செம்பருத்தியைத்தான் மனம் நினைச்சுப்பாக்குது. அந்தச் செம்பருத்தி மரத்தை என்ன பாடுபடுத்தியிருக்கிறன் எண்டும் யோசிச்சுப்பாத்தன். வாடி வதங்கின பூத்தொடங்கி இலைக்குள்ளால இருந்து எட்டிப்பார்க்கிற மொட்டு வரைக்கும் பிச்சுப்புடிங்கி ஆராய்ச்சி நடந்திருக்கு. விரிஞ்ச பூவின்ற இதழ்களை ஒவ்வொண்டாப் பிச்சுப் பார்க்கிறது. கோயில் அய்யர் மாதிரி கண்டாய நமாம், கிண்டாய நமாம் எண்டு மந்திரமோதிய படியே புடிங்கி எறியிறது - இதில இலைகளுக்கும் விதிவிலக்கில்ல. அடுத்த நாள் விரியப்போற மொட்டை மெதுவாப் பிரிச்சுப்பாக்கிறன் பேர்வழியெண்டு நாசமாக்கின மொட்டுகளுக்கு கணக்குவழக்கில்ல. சில மொட்டுகளை மட்டும் விட்டு வைச்சிற்று, இரவில போய் டோர்ச்லைட் அடிச்சுப் பாக்கிறது எண்டு இன்னொரு கூத்து. சனிக்கிழமைகளில அன்ரிக்கு செம்பருத்திப்பூக்களையும் இலைகளை புடுங்க உதவி செய்யிறது. அதை அவ அரைக்கேக உபத்திரவம் குடுக்கிறது இப்படி செம்பருத்தியப் பாக்கேக்க எல்லாம் ஓடிவாற அதோட சம்பந்தப்பட்ட நினைவுகள்..

