இதுவும் ஒரு ஈரான் நாட்டுப்படந்தான். இங்கு நடந்து கொண்டிருக்கும் திரைப்படவிழாவில் ஈரான் நாட்டு படங்களை வெளியிடுகிறார்கள். அதனால் நூலகங்களிலும் சில நல்ல வெளிநாட்டுப்படங்களை வாங்கி இருக்கிறார்கள். இத்திரைப்படம் அமெரிக்காவில் 1996 வெளியானபோது கொடுக்கப்பட்ட தலைப்பு - Life and nothing more.

நண்பர் கிருபா (மரத்தடி) கேட்டுக்கொண்டதற்கிணங்க, இலங்கைத்தமிழில் விமர்சிக்க முயலுகிறேன். வழக்கமாக தரும் நீண்ட விமர்சனம் இந்தப்படத்திற்கு தரமுடியாது என்று நினைக்கிறேன். ‘ஆயிரம் வார்த்தைகள் ஒரு படத்திற்கு சமானம்’ என்பது இங்கும் பொருந்தும்.
ஈரான் நாட்டுக்காரரான அப்பாஸ் கியாரோஸ்டாமி (Abbas Kiarostami) ஒரு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1987′ல் இவர் எடுத்த அருமையான படம் - ‘where is my friend’s home’ என்பது. லொகேஷனில் எடுக்கப்பட்ட படம் அது. அந்த இடத்தில இருந்த பெடியங்களை (பசங்க) வைத்து படம் எடுத்தவர். 1990இல் அந்த மலைப்பிரதேசத்தில இடத்தில பெரிய நிலநடுக்கம் நடந்து பெரிய சேதம். நிலநடுக்கம் நடந்த ரெண்டாம் நாள் இவரும் இவரின்ற ஏறக்குறைய பத்துப்பன்றெண்டு வயது மகனும் காரில வெளிக்கிட்டவை. அந்தப்பெடியங்களை பாத்து ஏதாவது உதவி செய்யத்தான் போகீனம். உண்மையா நடந்த கதை இது. என்னெண்டாலும் பெரிய டைரக்டரில்லே. அதனால தான் மட்டும்தனிய போகாம ஒரு படப்பிடிப்பு குழுவையும் பிடிச்சண்டு போனவர்.
போறவழியெல்லாம் சில இடங்களில போக முடியாம ஆபத்தான குறுக்குப்பாதைகளால போறெர். வழியெங்கயும் நிலநடுக்கத்தால ஏற்பட்ட சேதங்களை மக்கள் சரி செஞ்சண்டு இருந்திச்சினம். செத்தவைக்கு அழக்கூட நேரம், சக்தி இல்லாம இடிஞ்சு விழுந்த கட்டிடங்களை கிடியண்டு இருந்திச்சினம். பாக்கிற இடமெல்லாம் இரண்டு-மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த இயற்கையழிவு தாண்டவமாடினாலும், மக்கள் தத்தம் வாழ்க்கையை மறுபடியும் ஒரு வழிப்படுத்துவதில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையில் நிலநடுக்கம் நடந்தது 1992ம் ஆண்டின் அகில உலக கால்பந்து விளையாட்டுப்போட்டியின்போது… ஓரிடத்தில் கொட்டாய்களில் தங்கியிருந்த மக்கள், கூப்பிடு தூரத்தில் அவர்களின் வீடுகள் இடிந்து கிட்ட, உறவினர்கள் இறந்திருக்க, ஆண்டனா பூட்டி விளையாட்டு பாக்கிறது தயாராகியண்டு இருந்திச்சினம். கால்பந்தாட்டப்பைத்தியமான இயக்குநரின் மகனும் அங்கே நிற்பதாகவும் திரும்பி வரும்போது கூட்டிப்போகும்படியும் சொல்லி இறங்கிவிட்டான். போகும் வழியில் குன்றின் உச்சியில் ஆண்டனா சரி செய்துகொண்டிருந்தவனிடம், இப்படி அழிவு நடந்து ஏராளமானவர்கள் இறந்திருக்கும் இந்த நேரத்தில் விளையாட்டு முக்கியமா என்று கேட்க, அவனோ தன்னுடைய குடும்பத்தில் இறந்து போனவர்களின் பட்டியலை ஒப்பிக்கிறான். இறந்தவர்கள் இறந்துவிட்டார்கள். மற்றவர்கள் வாழவேண்டுமல்லவா? நானும் எப்போது இறப்பேன் என்று தெரியாது. அதுவரை பயந்து கொண்டிருக்கமுடியாது எண்டு நிலநடுக்கத்துக்கு அடுத்த நாள் கல்யாணம் செஞ்ச ஒரு ஆள் சொல்லுறான்.
வழியெங்கும் வயது வித்தியாசமின்றி மனோதைரியம் நிறைந்த மக்களைக்காணுகிறோம். இதற்கிடையே சில பகிடிகளும் இல்லாமல் இல்லை. மலைப்பாதைகளில் பயணித்த கார், ஆங்காங்கே மக்களை ஏற்றி, பொருட்களை ஏற்றி உதவி செய்தது. அப்படி வழியில் கண்ட பெரியவர் ஒருவரை ஏற்றிக்கொண்டார் அப்பாஸ். மேற்குறிப்பிட்ட படத்தில் இவரும் நடித்திருப்பதாக சொல்லுகிறார் இயக்குநர். பெரியவர், அவருடைய ஊர் வந்ததும் இறங்கிக்கொள்ளுகிறார். தன்னுடைய மகனுக்கு குடுக்கத்தண்ணீர் இருக்குமா என்று கேட்க, அவர்களையும் அழைத்துக்கொண்டு போகிறார் அந்தப்பெரியவர். இடிபாடுகளுக்கு இடையில் இவருடைய வீடுமட்டும் கனகம்பீரமாக காட்சி அளிக்கிறது. அது மட்டும் இடிந்து போகாமல் இருப்பது ஆச்சரியம் என்று இயக்குநராக நடித்தவர் சொல்லிக்கொண்டே போக, அவர்கள் பேசுவதெல்லாம் அங்கேயே படப்பிடிப்பு இடத்திலேயே பேசப்பட்டதுதான். பிறகு சேர்க்கவில்லை என்பதை ஒரு சம்பவம் உணர்த்தியது. இயக்குநராக நடித்தவர் பேசிக்கொண்டே இருக்கும்போது பெரியவர் தனக்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டு படியேறியது பார்வையாளர்கள் காதில் தெளிவாக விழுந்தது. பெரியவர் அப்படி என்னதான் சொன்னார்? இந்த வீடு என்னுடையதில்லை. என்னுடைய வீடும் இடிந்து நான் இப்போது டெண்டு கொட்டாயில் தங்கி இருக்கிறேன். இந்த வீடு என்னுடைய வீடு என்று சொல்லச்சொன்னார்கள். அப்படியே சொல்லுகிறேன்.
முணுமுணுத்துக்கொண்டே மேலே ஏறியவர், தொடருகிறார். ‘வீடு என்னுடையது என்று சொல்லச்சொல்கிறார்கள். புகைப்படம்/வீடியோ எங்காவது பொய் சொல்லுமா? இந்த வீடு என்னுடையது என்றால் ஏன் எல்லாக்கதவுகளுக்கும் சாவிபோட்டு பூட்டி இருக்கிறார்கள்?’ இப்படி அலுப்பாக பேசிக்கொண்டே தண்ணீர் குழாயைத்தேடுகிறார் மேல் மாடி விறாந்தையில். மேலே பலகணியில் தண்ணீர் குழாயைக்கண்டு கொண்ட பெரியவருக்கு தண்ணீர் கொடுப்பதற்கான பாத்திரம் கிடைக்கவில்லை. அந்த பலகணியில் நின்று கொண்டு கீழே இருந்த புகைப்படக்குழுவினரைப்பார்த்து தண்ணீர் எப்படிக்கொடுப்பேன். பாத்திரம் எங்கே என்று கேட்�
ரfபி பிட்ஸ் (Rafi Pitts) இயக்கத்தில் ரோயா நோனாஹாலி (Roya Nonahali), அலி சர்க்கானி (Ali Sarkhani) ஆகியோர் நடித்திருக்கின்றனர்.


இரானிய கிராமம் ஒன்றில் இரண்டு குடும்பங்கள் ஒருவரை மற்றவர் பகைத்துக்கொண்டு ஒருவரை மற்றவர் தாக்கிக்கொன்று வருகின்றனர். இந்த சண்டையால் அவதியுற்ற அந்த ஊர் மக்கள் கிராமத்தலைவரிடம் முறையிட அவரும் முன்னின்று இருகுடும்பத்திற்கு திருமண உறவேற்படுத்திக்கொடுக்கிறேன். ஜமால்வாண்டி குடும்பப்பெண்ணை கமால்வாண்டி குடும்ப ஆண் மணப்பதற்கு இருகுடும்பத்தாரும் சம்மதித்து திருமணம்வரை வந்துவிட்டனர். ஆனால் திருமண அரங்கில் ஊரே கூடியபிறகு, மணமகன் கராமத், இத்திருமணத்தினால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று சொல்லி வெளியேறுகிறான். மணப்பெண் ஒர் கணம் திகைத்து, பின் தானும் அவனை மணந்து பிறகு தொல்லை கொடுக்கலாம் என்ற முடிவோடு சம்மதித்ததாக கூறுகிறாள். திருமணம் தன்னெதிரிலேயே முறிந்ததைக் கண்ட கிராமத்தலைவருக்கு மாரடைப்பு வந்து அங்கேயே உயிர் பிரிகிறது.
மணமகன் ஊரைவிட்டே எங்கோ போய் விடுகிறான். மணமகளாக இருந்த மெஹர்பானு கிராமத்தில் எங்கு போனாலும் பரிகசிக்கப்பட்டாள், தனிமைப்படுத்தப்பட்டாள். தாய்தந்தை அற்ற அவளுக்கு இருக்கும் ஒரே துணை அவளது சகோதரனும், கூட இருக்கும் சில உறவினர்களுந்தான். ஆனால், தன்காலிலேயே நிற்கவேண்டிய நிற்பந்தம் அவளுக்கு. அதனால், அவளின் தாயார் விட்டுப்போயிருந்த நிலத்தை தானே பராமரித்து அதிலிருந்து வரும்பணத்தில் வாழ்ந்து வருகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய கோபம் அடங்கும் சமையத்தில் கராமத் ஊர் திரும்புகிறான். வந்தவன் சும்மா வரவில்லை. சிறு மினி பஸ்ஸை கிராமத்திலிருந்து பக்கத்தில் இருக்கும் நகரத்துக்கு மக்களை அழைத்து சென்று பணம் சம்பாதிக்கும் எண்ணத்தோடு வந்திருந்தான். கூடவே அவன் மினி பஸ் வாங்கிய நிறுவனபிரதிநிதியும். அந்த ஊர் மக்கள் அனைவரும், கமால்வாண்டி, ஜமால்வாண்டி இருகுடும்பத்தினரும் மினி பஸ்ஸை மிகவும் ஆச்சரியத்தோடு பார்த்து அதில் பயணமும் செய்தனர். முதல் நாள் தன் உறவினர் அனைவரையும் வண்டியில் இருந்து இறக்கிவிட்டுவிடுகிறாள் மெஹர்பானு. அதுவரை வண்டிலில் மக்களை நகரத்திற்கு கொண்டுபோய்க்கொண்டிருந்த சகோதரனுக்கும் வேலை இல்லாததால், தனியரு ஆளாக அவளது அம்மாவின் நிலத்தை பராமரிக்கிறாள். அவ்வப்போது அவளுடைய நினைவிடத்திற்கும் போய் புலம்புகிறாள். கமால்வாண்டி குடும்பத்துடனான பகையை தொடரும்படி அப்போது சிறுமியாக இருந்த என்னை ஏன் கேட்டாய். இறந்துபோன அண்ணனின் முகம்கூட எனக்கு ஞாபகம் இல்லை. உறவினர்களும் எனக்கு கொம்பு சீவி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். திருமணம் நின்று போய்விட்டதே, என்ன செய்யலாம். எனக்கு வயதாகிறதே என்று யாருக்கும் கவலை இருப்பதாக தெரியவில்லை என்று கவலைப்படுகிறாள். இப்படி இருக்கும்போது கிராமத்தில் அங்காங்கே சந்தித்துக்கொள்ளுகிறார்கள் கராமத்தும் மெஹர்பானுவும். ஊர்மக்களால் தன்னுடைய சகோதரன் கேவலப்படுத்தப்படுவது பொறுக்காத மெஹர்பானு, நிலத்தை விற்று கராமத்’துடைய மினி பஸ் போலவே அவளுடைய சகோதரனுக்கும் வாங்கிக்கொடுக்கிறாள். இப்போது இருவருக்குமிடையிலான போட்டியில் பயணக்கட்டணத்தை குறைப்பது, இலவச சலுகைகள் அளிப்பது, நகரத்துக்கு போய்வரும் வழியில் அடிபடுவது என்று போட்டியுடன் வாழ்க்கை நகருகிறது. ஊர்மக்களும் சுவாரசியமாக இச்சண்டையை பார்த்துக்கொண்டு வருகிறார்கள். பொழுதுபோக வேண்டுமல்லவா? ஒரு முறை நகரத்தில் இருந்து வரும்போது நடந்த சண்டையில் இரு வண்டிகளும் மோதிக்கொண்டதில் இரண்டுமே உருக்குலைந்து போயின. ஊர் மக்கள் இரண்டுவண்டியிலும் போகாமல், நடராஜா சர்வீஸில் போனார்கள். இப்படியே போகப்போக, மெஹர்பானுவும் கராமத்தும் தங்களையறியாமல் ஒருவரை ஒருவர் விரும்பத்தொடங்கினார்கள்.
ஒரு நாள் நகரத்திற்கு சென்று திரும்பும் வேளையில் கராமத்தின் வண்டி சக்கரம் தனியே கழண்டு ஓடத்தொடங்கியது. வாகனமும் தறிகெட்டு ஓடியது. கிராமத்தில் அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர். இரவு முழுவதும் காத்திருந்தும் இரு வண்டிகளும் வரவில்லை. மறுநாள் ஒரு வண்டி மெதுவாக கிராமத்தை வந்து சேர்ந்தது. மெஹர்பானுவின் வண்டி அது. அவனிடம் போய் கராமத்தின் வண்டியை சகோதரன் கண்டானா என்று மெஹர்பானு கேட்கிறாள். இல்லையென்றும் தன்னுடைய வண்டியை நகரத்தில் சரிசெய்துவருவதற்கு நேரமாகி விட்டதால் தான் காலையில் வர நேர்ந்தது என்று அவன் கூறுகிறான். ஆனால், முதல்நாள் மாலையெ கராமத்தின் வண்டி நகரத்திலிருந்து கிளம்பியது என்று அவன் கூறினான். செய்வதறியாது திகைத்து நின்ற மக்களை கயிறு போன்ற பொருட்களை எடுத்துக்கொண்டு தன் வண்டியில் ஏறுமாறு சொல்லி கராமத்தையும் அவனது மினிபஸ்ஸையும் தேடிப்போகிறாள் மெஹர்பானு.

ஏனைய ஈரானிய படங்கள் போல விருதுகளைக்குவிக்காவிட்டாலும், ஈரானில் பொதுமக்கள் மிகவும் ரசித்த படமாம் இது. நான் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் பெண் ஈரானை சேர்ந்தவள். அவளுடன் சேர்ந்து பார்த்த படந்தான் இது. அவளுக்கு மிகவும் பிடித்த படமாம். பெரும்பகை கொண்ட இருகுடும்பத்தையும் சேர்ந்த ஆணும் பெண்ணும் மெதுவாக காதல் வயப்படும் படம். அதுவும் நம்ம ஊர் படங்களைப்பார்த்த கண்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. மெஹர்பானுவாக நடித்தவரின் கண்ணில் தெரியும் தீ (?) இவரின் மற்றப்படங்களையும் தேடிப்பார்க்க சொன்னது. பார்த்தால் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.