July 23, 2006

Lady in the Water (2006)

தன்னை நம்பச் சொல்கிறார். எதிர்பார்க்கிறார்.

எனக்கு சின்னப்பிள்ளைகளுக்குக் கதை சொன்ன அனுபவமெல்லாம் கிடையாது. அதுவும் bedtime stories - இல்லவேயில்லை! முன்பு ஒரு தடவை தேசிகனின் வலைப்பதிவில் அவருடைய பெண்ணுக்குச் சொன்ன கதையை எழுதியிருந்தார். அங்கே, பத்ரி சிறுபிள்ளைகளுக்குக் கதை சொல்லும் அனுபவம் பற்றிச் சொன்ன மறுமொழிதான் நினைவுக்கு வந்தது. சின்னப்பிள்ளைகள், நாம் கதை சொல்லும்போது நம்மோடு கூட வருவார்கள். ஈடுபாட்டோடு கேள்விகள் கேட்டு தம்மை புதிய அனுபவங்களுக்கு உட்படுத்திக்கொள்வார்கள். அதே சமயம், சமாளிக்க முடியாத இடக்குமடக்கான கேள்விகளையும் கேட்பார்களாயிருக்கும்.

Lady in the Water-இல் மனோஜ் சியாமளன், தன் பிள்ளைகளுக்குச் சொன்ன கதையைப் படமாக்கியிருக்கிறார். Finding Neverland-இல் ஜேம்ஸ் பார்ரீ, சிறுவர்களோடு கதைகளை உருவாக்கி விளையாடுவதுபோல, மனோஜ் சியாமளன் பார்வையாளர்களோடு விளையாடியிருக்கிறார் என்று சொல்லலாம். கதையென்று பார்த்தால், மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக வந்த ஒரு நார்ஃப்-ஐ பிலடெஃபியாவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழும் மனிதர்கள் காப்பாற்றி அனுப்பி வைக்கிறார்கள். படத்தை நகர்த்திச் செல்லப் பயன்படுவது ஒரு கொரிய நாட்டுச் சிறுபிள்ளைகளுக்கான கதை.

வழமையான மனோஜ் சியாமளன் பட விதயங்களைக் காணக்கிடைக்கவில்லை. சந்தோ்ஷமாகவிருந்தது. Wide Awake தொடங்கி எல்லாப் படங்களிலும் இருக்கும் திடீர் முடிவுத் திருப்பங்கள் இதில் இல்லை. திகில்க் காட்சிகள் இல்லையென்றே சொல்லலாம். ஓரிரு முறைகள் இருந்தாலும், அப்படியொன்றும் நன்றாக வரவில்லை.

அடுக்கு மாடிக்குடியிருப்பில் வாழும் மனிதர்களில் சில பாத்திரப்படைப்புகள் சுவாரசியமாக இருக்கின்றன. குறிப்பாக, கிராஸ்-வேர்ட் புதிர்களில் ஈடுபாடுள்ள அப்பாவும் பிள்ளையும். நார்ஃபாக நடித்திருக்கும் Bryce Dallas Howard நன்றாகச் செய்திருக்கிறார். அவரை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட பாத்திரமென்பதால் பெரிய கஷ்டமிருந்திருக்காது என்று நினைக்கிறேன். Sideways, Cindrella Man படங்களைப்போல இந்தப்படமும் Paul Giamattiக்கு நல்ல படம். ஆங்காங்கே Sideways படத்தை நினைவுபடுத்தினாலும் சாதாரணர் வேடத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார்.

படத்துக்கு என்ன நடந்தாலும், Cleveland Heep-ஆக நடித்த போல் கியாமட்டிக்கு நல்ல வேடம். நடிக்கக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார். திரைப்பட விமர்சகர் வேடமொன்றும் படத்தில் இருக்கிறது. அந்தப் பாத்திரம் பேசும் வசனங்கள், விமர்சகர்களுக்குக் கோபமேற்படுத்தலாம். முக்கியமாகக் கடைசியில் அந்தப் பாத்திரம் பேசும் வசனங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் விமர்சகர்களைக் கிண்டலடித்திருக்கிறார் சியாமளன். அந்தப் பாத்திரம் பேசும்போதெல்லாம், சிக்ஸ்த் சென்ஸ் படத்துக்கு விமர்சனம் எழுதிய N.Y.Times விமர்சகர் நினைவுக்கு வந்தது - என்னுடைய பக்கசார்பினால் இருக்கலாம். :)

படத்தில் படுத்தியெடுக்கும் விதயங்கள் நிறைய இருக்கின்றன. மனிதர்களில் முக்கியமானவர் சரிதா சௌத்ரி. மனோஜ் சியாமளனும் படத்தில் முக்கிய வேடத்தில் வருகிறார். இவருக்கென்னத்துக்கு இந்த வி்ஷப்பரிட்சை, நடிக்க ஆசையிருந்தால் ஏதாவது சிறுபாத்திரத்தில் வந்துபோவதுதானே என்று தோன்றுகிறது. பார்க்க அசப்பில் என் சகோதரனைப்போல இருந்ததால் ரொம்பவும் திட்ட முடியவில்லை. ;) அவ்வப்போது தோன்றி, கதையை நகர்த்திச் செல்லும் கொரியப் பெண்மணி, ஒரு கொரிய [தெற்காசிய என்றும் வைத்துக்கொள்ளலாம்] ஸ்டீரியோடைப் பாத்திரமாக அமைத்திருந்தது ஏமாற்றமாக இருந்தது. அதுவும், கதையை சௌகரியமாக ஆங்காங்கே தொங்க விட்டுவிட்டு இந்தப் பெண்மணியிடம் வருகிறது திரைக்கதை.

ஒரு கட்டத்துக்கு மேல், படத்தில் அதன் குழறுபடிகளையும் தாண்டி ஆழ்ந்துபோனேன். அப்படிப் போகும்போதெல்லாம், அதிலிருந்து என்னை மீட்டு இரட்சித்தது மனோஜ் சியாமளன் உருவாக்கிய அன்னிய உருவங்கள். அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே இருக்கும்போதாவது கொஞ்சம் நம்ப முடிகிறது. படத்தின் கடைசிக்கட்டங்களில்.. - மன்னிக்கவும்! என்னால் நம்பமுடியவில்லை. நம்புவதற்கு முயற்சி செய்தாலும் சிற்சில குழறுபடிகள் செய்து அந்த நம்பகத்தன்மையை போக்கடித்துவிடுகிறார் இயக்குநர்.

அதுவும் படத்தின் கடைசிக் காட்சி.. - யாராவது ஸ்டீவன் கோல்பேரின் நிகழ்ச்சியைப் பார்ப்பதுண்டா?

கடைசியாக: என்ன சொல்வது? மனோஜ் சியாமளன் புதியதொரு முயற்சியில் ஈடுபட்டிருக்கலாமோ என்று மனதைத் தேற்றிக்கொள்ளத் தோன்றுகிறது. அசலான விதயங்களைவிட நம்பக்கூடியமாதிரி போலியான விதயங்களை உருவாகக்கூடிய தொழில்நுட்பம் இருக்கும்போது [உதா: டைனோசர் தொடங்கிப் பல விதயங்கள்..] எதற்கு ametuerishஆக அன்னிய உருவங்களை உருவாக்கினார் என்று தெரியவில்லை. Signs படத்து உருவங்களும் அப்படி இருந்தது நினைவிருக்கலாம்.

இந்தப் படத்துக்கு ஆங்கிலத்தில் வேறு ஓர் இடுகை எழுதியிருக்கிறேன். :)

July 14, 2006

கியூபெக் படங்களில் சிறந்ததாக C.R.A.Z.Y. தேர்வு

மொன்ரியல் பத்திரிகையொன்று நடத்திய வாக்கெடுப்பில் இதுவரை வந்த கியூபெக் படங்களிலேயே சிறந்த படமாக C.R.A.Z.Y. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. C.R.A.Z.Y. பற்றிய என்னுடைய இடுகை இங்கே.

அந்த வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 திரைப்படங்கள்

seraphin

1. C.R.A.Z.Y. (27,9 %) -
http://mathy.kandasamy.net/movietalk/archives/2006/03/09/59

2. La Grande Sளூduction (15,5 %) - http://mathy.kandasamy.net/movietalk/archives/2005/12/01/46

3. Les Invasions barbares (8,7 %)

4. Sளூraphin : Un homme et son pளூchளூ (5,2 %) - http://mathy.kandasamy.net/movietalk/archives/2006/04/02/65

5. Cruising bar (4,1 %)

6. Le Dளூclin de l’empire amளூricain (3,9 %)

7. Les Boys (3,7 %)

8. Elvis Gratton (3 %)

9. Mon oncle Antoine (2,8 %)

10. Aurore (2 %)

செய்தி: http://www2.canoe.com/artsetculture/actualites/cinema/archives/2006/07/20060714-075104.html

Beyond Rangoon (1995)

நிறைகளை விடக் குறைகளே அதிகம் எனக்குத் தென்பட்டதென்றாலும் பார்க்க வேண்டிய படம். ஏதேனும் ஒரு நாட்டின் பிரச்சினைகளைப்பற்றிப் பேசப்போனால் அங்கே ஒரு அமெரிக்க அல்லது வெள்ளையினத்தவர் ஹீரோவாக இருப்பார். இது நியதி. அவர் ஏன் அங்கு வந்தார்? எப்படி வந்தார் என்ற கேள்வியெல்லாம் எழக்கூடாது. :) இன்னொரு கோணத்தில் பார்த்தால் ஏன் அப்படி அமைக்கிறார்கள் என்பதும் புரியும். அமெரிக்கர்களைப் படம் பார்க்க வைப்பதற்கான உத்தியாகவும் இதைப் பார்க்கலாம். தெரிந்த பழக்கப்பட்ட முகங்களைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக படத்தினுள் ஆழ்ந்து போகும் பார்வையாளர்களிடம் படத்தின் உட்கருத்தைச் சொல்லலாம்.

John Boorman-ஐப்பற்றி மாஸ்டர் கிளாஸ் புத்தகத்தில்தான் படித்தேன். அரசியற்கருத்துக்களை உள்ளடக்கிய படங்கள் எடுப்பவர்கள் என்று சொல்லியிருந்தது. முழுவதும் படித்தபோதுதான் இவர்தான் டெயிலர் ஆஃப் பனாமா பட இயக்குநர் என்றறிந்தேன். வெறும் 007 ஜேம்ஸ் பாண்டாக வேடங்காட்டிக்கொண்டிருந்த பியர்ஸ் ப்ராஸ்னனுக்கு அந்த வேடத்தோடு ஒட்டிய ஆனால் மாறுபட்ட பாத்திரத்தைக் கொடுத்தவர் என்று அறிந்தபோது மரியாதை வந்தது. டெயிலர் ஆஃப் பனாமா பார்த்தபோது பியர்ஸ் ப்ராஸ்னனை அப்படிக் காட்டியதே பிடித்திருந்தது.

நூலகத்தில் ஜோன் பூர்மனின் பெயரைக் கொடுத்துத் தேடியபோது அகப்பட்ட படந்தான் பியோண்ட் ரங்கூன். பாட்ரீ்ஷியா ஆர்க்குவெட்டை இதற்கு முன்னர் எந்தப் படத்திலும் பார்க்கவில்லையென்றாலும் ஜோன் பூர்மனுக்காக எடுத்தேன். ஆரம்பத்தில் சொன்னபடி படு செயற்கையான காட்சி அமைப்புகளும் சிரிப்பு மூட்டக்கூடிய வசனங்களும் இருந்தாலும் படத்தோடு ஒன்ற முடிகிறது. 1988க்கு முன்னரே படக்கதை தயார் செய்து, பிறகு பர்மாவில் நடந்த பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும்படி கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கிறார்களாம்.

இலங்கையிலாவது இரு வேறு இனம்/மொழி/மதம்/கலாசாரம் போன்ற காரணங்கள் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கின்றன. பர்மாவில் அப்படிப்பட்ட காரணங்கள் ஒன்றுமேயில்லாமல் ஒரேயினத்தைச் சேர்ந்த மக்கள் அடித்துக்கொள்ளும்போது, மக்கள் அடிமைப்படுத்தப்படும்போது வலிக்கிறது.

தொடக்கத்தில் மெதுவாக நகர்ந்த திரைக்கதை போகப்போக சூடு பிடிக்கிறது. அமெரிக்க டாக்டர் லோரா போமனின் கணவரும் மகனும் அவர்களின் வீட்டிலேயே கொல்லப்படுகிறார்கள். அவருக்கு ஆறுதலாக இருக்கும் என்று அவரது சகோதரி, அவரை தெற்காசியாவிற்கு அழைத்து வருகிறார். அப்படி அவர்கள் வரும் நாடுகளில் ஒன்றுதான் பர்மா எனப்படும் மியான்மர். மகனை இழந்த துயரத்தில் எதைப்பற்றியும் அக்கறைப்படாமல் இருக்கிறார் லோரா. ஒரு நாளிரவு நகரத்தில் நடக்கும் கூட்டத்தில் Aung San Suu Kyi பேசுவதைக் காண்கிறார். அப்போது அவரது கடவுச்சீட்டை யாரோ களவெடுத்துவிட்டதால் அவர் மட்டும் தங்கவேண்டியதாகிறது. அமெரிக்க தூதரகத்தில் பயணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வாங்கியவர், ரங்கூனுக்கு வெளியே சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டு ஒருவருடன் செல்கிறார். கூட்டிச் செல்லும் கைட் சின்ன வயதில் பிக்குவாக இருந்த புத்த விகாரைக்குச் செல்கிறார்கள். பழுதுபடும் காரை, கைட்-இன் நண்பர்கள் இருக்குமிடத்துக்குக் கொண்டு செல்கிறார்கள். அரசாங்கத்துக்கு எதிரான அவர்கள், அவர்களைத் தேடி வரும் இராணுவத்திடமிருந்து தப்பித்துச் செல்கிறது. லோராவும் போகிறார். அவரை, அவர்கள் பத்திரமாகத் தனியே அனுப்பி வைக்க விரும்பினாலும் எல்லோரும் ஒன்றாகத் தப்பிக்க வேண்டிய கட்டாயம். இதற்குப்பிறகு படம் சூடு பிடிக்கிறது.

தெற்காசியாவில் நடக்கும் படம் என்பதாலும் உருவ ஒற்றுமைகளாலும் apocalypse - redux, deerhunter போன்ற படங்கள் நினைவுக்கு வந்தன. பியோண்ட் ரங்கூன் -இல் நடக்கும் வன்முறைகள் மற்றப்படங்களில் நடந்த வன்முறைகளுக்கு எந்த விதத்திலும் குறைவானதாக இருக்கவில்லை.

படம் முடிந்த பிறகு 1988 மியான்மரில் நடந்த ஜனநாயக எழுச்சியின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டதாகவும் ஏறக்குறைய 700,000 மக்கள் நாட்டை விட்டோடியதாகவும் இன்னும் இரண்டு மில்லியன் மக்கள் இருப்பிடங்களில் இருந்து துரத்தப்பட்டு காடுகளில் வாழ்ந்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. Aung San Suu Kyi-யின் கட்சி தேர்தலில் வென்றும் ஆட்சி மாற்றம் நடைபெறாததையும் 1991-இல் அவருக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டத்தையும் குறிப்பிடுகிறார்கள்.

-0-

மேலேயிருக்கும் இடுகையை எழுதி புகைப்படங்களைத் தேடும்போது கிடைத்த ஒரு கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

By John Follain

CANNES, France (Reuter) - British director John Boorman, best known for
his escapist adventure films, Friday entered the Cannes festival with a
highly political film about Burma’s crackdown on democracy protests in 1988.

“Beyond Rangoon” is dedicated to Nobel Peace prize-winner Aung San Suu
Kyi, who symbolizes the protest movement in the Southeast Asian country and
has lived under house arrest in Burma since 1989.

Boorman, 62, said he had to overcome pressure from Burma’s military
government to picture its bloody repression on the silver screen — it went
largely unseen abroad because foreign television crews were expelled.

“A film can’t change the world but I do think that when people have had
the emotional experience of seeing a movie like this they will read more
about Burma. We plan to show it to as many politicians as possible,” he told
a news conference.

“You could say this is my first film with a powerful political content
but much more important for me is the courage and the overcoming of fear
shown by the characters,” said Boorman, who made “Excalibur” and “The
Emerald Forest.”

A young American doctor (Patricia Arquette), vacationing in Burma to try
to forget the murder of her husband and child, rallies behind the protesters
and flees with them as troops hunt her down.

Sickened by the repression, she saves an activist and regains the will to
live after crossing rainforests and rapids.

Boorman, who made several clandestine forays into Burma for research,
shot the film in Malaysia but Rangoon authorities put pressure on his hosts
and he was told to leave after several months of shooting.

“We were horrified. We’d built pagodas, villages and a giant statue of a
reclining Buddha,” he said.

He managed to negotiate permission to stay provided he strike out all
references to Burma in the script. He obliged and got the script approved,
but went ahead and shot his original plan anyway.

The team worked from eyewitness accounts and photographs to recreate
crowd protests outside the U.S. embassy in Rangoon and the army’s shooting of
protesters. Hundreds, perhaps thousands, of people were killed.

One electrifying scene has Aung San Suu Kyi, confronted by soldiers
pointing their guns at her at a Rangoon demonstration, walk up to them and
lead the crowd through unharmed.

Leader of the National League for Democracy, she lives separated from her
family and her British husband is allowed only rare visits. She has refused
an offer from authorities to go into exile.

The NLD swept more than 80 percent of the seats in 1990 elections. But
the government ignored the results, claiming a new constitution had to be
drawn up before any transfer of power to a civilian government could occur.

Professor and pro-democracy activist U Aung Ko was asked of the risks he
had taken in appearing in the film as himself:

“I am aware of the danger and of course I will be careful but that is
not the important thing to me. What is important is to have made this film.”

July 10, 2006

The Proposition (2005)

இந்த ஆஸ்திரேலிய வெஸ்டர்ன் கிளாசிக் படம், பல விருதுகளைப் பெறவேண்டிய படம். பெறுகிறதா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

திடீரென்று தகரக்கொட்டாயொன்று துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்படுகிறது. உடனிருந்த பெண்கள் உயிரிழக்க, 14 வயதுத் தம்பி காயப்பட தனித்துப் போகிறான் சார்லீ பர்ன்ஸ். அவர்களைப் பிடித்த காப்டன் ஸ்டான்லீ அவர்களிடம் பேரம் பேசுகிறான். சார்லீ, அவனுடைய மூத்த சகோதரன் ஆர்த்தர் பர்ன்ஸைப் பிடித்துக் கொடுத்தால், சார்லியையும் அவனுடைய தம்பியையும் விட்டுவிடுவதாகச் சொல்கிறான். சார்லீயை நம்பலாமா கூடாதா? ஆர்த்தரின் கொடூரமான பழக்கங்களினால் தம்பியைக்கூட்டிக்கொண்டு பிரிந்து சென்ற சார்லி என்ன செய்வான்? மைக் பர்ன்ஸ் உயிர் பிழைப்பானா? அல்லது அண்ணன்கள் இரண்டு பேரும் சேர்ந்து தம்பியைத் தப்ப வைப்பார்களா? அல்லது அதற்குள் மைக் பர்ன்ஸ் செத்துவிடுவானா என்று பல கேள்விகள்.

இடம் ஆஸ்திரேலியா என்பதைத் தவிர மற்றையதெல்லாம் தெரிந்த பழகிய விதயங்களே. கோடூரமான கொள்ளைக்காரர்கள். பிராந்தியத்தின் சட்ட ஒழுங்கைக் கட்டிக்காக்க முயலும் போலீஸ். போலீஸ் காரனின் நாகரீகமான மனைவி. பழங்குடி இனத்தவர்கள். என்று எல்லாமே தெரிந்த விதயங்கள்.

ஆனால், தொடங்கியதில் இருந்து நம் கவனத்தைத் தக்க வைப்பதில் இயக்குநரும் கதாசிரியரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதே போல காமரா. ஆஸ்திரேலியாவின் புழுதி பறக்கும் நிலம் படத்தை தவிர்க்க முடியாததாக ஆக்குகிறது. கொள்ளைக்காரர்களாக நடித்திருக்கும் கை பியர்ஸும் டானி ஹஸ்டனும் அசல் கொள்ளையர்கள் போலத் தெரிகிறார்கள். எல்.ஏ. கான்ஃபிடென்்ஷியல் மற்றும் மெமெண்டோ படங்களுக்குப் பிறகு இப்போதுதான் கை பியர்ஸைப் பார்க்கிறேன். i dont know why he doesnt act in more movies.

நடிகர்கள் அனைவருமே ஏதோவொரு விதத்தில் நம் கவனத்தைக் கவருகிறார்கள். ‘Breaking the Waves’ கவனத்தை ஈர்த்த எமிலி வாட்சன், காப்டன் ஸ்டான்லியின் ஆங்கில மனைவியாக. கொஞ்ச நேரம் வந்தாலும் கவனத்தில் நிற்கும் ஜோன் ஹர்ட். மிகச் சிறிய வேடத்தில் David Gulpilil. இவர்களெல்லோரையும் விட கூடுதல் கவனத்தைப் பெற்றவர் காப்டன் ஸ்டான்லியாக நடித்திருக்கும் Ray Winstone. கொள்ளைக்காரர்களுடன் பேரம் பேசி சார்லீ பர்ன்ஸை விடுவித்துவிட்டு அதை மற்றவர்களுக்குத் தெரியாமல் காப்பாற்றுவது. வீட்டில் நாகரீகமான மனைவியிடம் தன்னுடைய cockney வழக்கில் கதைப்பது, மனைவி இங்கிலாந்தில் இருப்பதுபோல நடந்துகொள்வதற்கு உதவியாக இருப்பது, தன்னுடைய திட்டம் பலிக்குமா என்று தெரியாமல் இருப்பது என்று பல பரிமாணங்கள் எடுத்திருக்கிறார்.

படத்தில் ஒரு சுவாரசியமான காட்சி. காப்டன் ஸ்டான்லியின் வீட்டில் வேலை செய்யும் பழங்குடியினத்தவரொருவர் கிறிஸ்மஸ் விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் செல்கிறார். போகும்போது கவனமாக, சப்பாத்துகளைக் கழற்றி வைத்துவிட்டுப் போகிறார். டேவில் குல்புலில்-உம் அதேபோல அவரைப்பற்றிய விவரணப்படத்தில் நடந்துகொண்டது நினைவுக்கு வந்தது. சொந்த இடத்துக்குப்போகும்போது வெளியுலகின் எச்சங்களை அவரும் துறந்து குடும்பத்தாருடன் சொந்த மொழியில் பேசிப்பழகி வேட்டையாடி வாழ்ந்ததைக் காட்டினார்கள்.

வெட்ட வெளியில் படத்தை எடுத்திருந்தாலும் அது பற்றிய உணர்வு நம்மிடம் இல்லாதிருக்கிறது. காமரா அந்தளவு சிறப்பாக இருக்கிறது.

தவிர்க்கக்கூடாத படம் என்பதை மட்டும் திரும்பச் சொல்லி வைக்கிறேன். ஏற்கனவே வந்திருக்கும் வெஸ்டர்ன் படங்களுக்கு எந்தளவும் குறைவானதல்ல. என்னென்ன படங்களுடன் ஒப்பிடலாம் என்று சொல்ல ஆசைதான், ஆனால் அதுவே கதையை வெளிக்காட்டி விடுமோ என்று பயமாக இருக்கிறது. நீங்களே பாருங்களேன். :)