The Last Samurai

1870களில் இலக்கில்லாமல் திரிந்துகொண்டிருக்கும் அமெரிக்கப் படைவீரனொருவன் merceneryஆக ஜப்பான் செல்கிறான். மாதம் ஐந்நூறு டாலருக்கு ஜப்பானியப் படைவீரர்களை மேற்கத்தைய முறையில் போருக்குத் தயார்செய்வதுதான் அவனுடைய வேலை. கூட செல்வது அவனுடைய கர்னல். ஜப்பானை நவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஜப்பானிய பேரரசரின் படைகளையே இவர்கள் பயிற்றுவிக்கப்போகிறார்கள். விவசாயிகளும், சண்டை என்றால் என்னவென்று அறியாதவர்களும் நிறைந்த படையைப் பயிற்றுவிக்க மிகவும் சிரமப்படுகிறான் அந்த அமெரிக்கப்படை வீரன், நேதன் ஆல்கிரென் (Nathan Algren)
பேரரசரின் திட்டங்களுக்கு குறுக்கே நிற்பது அவரது சாமுராய்களில் ஒருவரும், அவரின் ஆசிரியருமான காட்சுமோட்டோ (Katsumoto). படைவீரர்கள் போருக்கு இன்னமும் தயாராகவில்லை என்று நேதன் ஆல்கிரென் சொல்லச்சொல்லக் கேளாமல், கர்னல் பாக்லி யுத்தத்துக்கு செல்கிறார். அங்கே காட்சுமோட்டோவின் சாமுராய் வீரர்களுடன் தாக்குப்பிடிக்க முடியாமல் பேரரசரின் படைகள் சின்னாபின்னப்படுகிறார்கள். பல சாமுராய் வீரர்களுடன் பலத்த காயங்களோடும் போராடிக்கொண்டிருந்த நேதன் ஆல்கிரெனை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் காட்சுமோட்டோ. சாமுராய்கள் காட்டுமிராண்டிகள், நாகரீகம் வீசை என்ன விலை என்று கேட்பவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த ஆல்கிரெனின் எண்ணம் மாறுகிறது. அமெரிக்காவில் சிவப்பிந்தியப் பெண்களையும் குழந்தைகளையும் போர் என்ற பெயரில் கொலை செய்தபிறகு, தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்த ஆல்கிரென், காட்சுமோட்டோவுடன் தங்கியிருந்தபோதுதான் நிம்மதியாக ஒரு இரவையாவது கழிக்க முடிந்திருக்கிறது என்று சொல்கிறான். ஜப்பானிய கலாச்சாரம், சாமுராய்க்களின் பழக்க வழக்கங்கள், போர்முறைகள் என்று ஆல்கிரென் கற்றுக்கொள்ள மேற்கத்தியர் பற்றித் தெரிந்துகொள்ள காட்சுமோட்டோ ஆர்வம் காட்டுகிறார். அவ்வப்போது தத்துவ ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுகின்றனர்.
சாமுராய்கள் தோற்கடிக்கப்பட்டதும் தங்கள் உயிர்களைப் போக்கிக்கொள்வது ஆல்கிரெனுக்கு புதிரான விஷயமாக இருக்கிறது. இதற்கிடையில், காட்சுமோட்டோவின் உயிரை எச்சரிக்கையாக இருந்தபடியால் ஆல்கிரென் காப்பாற்றுகிறான். பேரரசர் தோக்கியோ வரை பாதுகாப்பாக செல்வதற்கு வழி அமைத்திருப்பதாக காட்சுமோட்டொ சொல்லி அனைவரும் புறப்படுகின்றனர். அங்கே போனபிறகுதான் நிலமையின் தீவிரம் ஆல்கிரெனுக்குப் புரிகிறது. பேரரசர், எடுப்பார்கைப்பிள்ளையாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பதும். அவரை வழிநடத்துவதாகச் சொல்லி பழம்பெருமை வாய்ந்த ஜப்பானிய நாகரீகத்தை ஒதுக்கிவிட்டு மேற்கத்திய நாகரீகத்துக்கு வழிவிட்டுக்கொண்டிருப்பதும், மேற்கத்திய நாட்டு தூதுவர்கள் தத்தம் நாடுகளுக்கு வருமானம் ஈட்டுவதற்காக தோக்கியோவில் கூடியிருப்பதையும் காட்சுமோட்டோ காண்கிறார். ஆசிரியரான காட்சுமோட்டொ, பேரரசரிடம் ஜப்பானிய பழம்பெரும் நாகரீகத்தைப்பற்றிப்பேசி, அதைக்கைவிட வேண்டாம் என்று வேண்ட, பேரரசர் தான் என்ன செய்யவேண்டுமென்று ஆசிரியராக வழிகாட்டுமாறும் கேட்கிறார். (எனக்கென்னமோ தன்னைக்கடவுள் என்று கொண்டாடும் நாட்டின் பேரரசர், எத்தனை வயதில் குறைந்தவராக இருந்தாலும் கேட்டிருப்பார்/பேசியிருப்பார் என்று தோன்றவில்லை.) பேரரசர் முன்பு மண்டியிட்டமர்ந்து கடவுள் போன்ற பேரரசருக்குத் தான் வழிகாட்டலாமா என்று கேட்கிறார் காட்சுமோட்டோ.
அடுத்த நாள் நடக்கும் கலந்தாலோசனைக்கூட்டத்தில் ஜப்பானிய உடையோடும் உடை வாளோடும் வந்த காட்சுமோட்டோவுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பேரரசர் சொன்னால், வாளை அணியமாட்டேன் என்று காட்சுமோட்டோ சொல்ல, பேரரசரோ ஒன்றும் சொல்லாமல் மௌனம் காக்கிறார். காவலாளிகளால் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்படும் காட்சுமோட்டோ வீர மரணம் எய்துவதற்காக கத்தியன்றையும் வைத்துச் செல்கிறார்கள். தன் இருப்பிடத்துக்குச் சென்று அமெரிக்கா திரும்பும் ஏற்பாடுகளைக் கவனிக்கும் ஆல்கிரென், ஏதோ தோன்ற காட்சுமோட்டோவின் இருப்பிடம் தேடிச் செல்கிறான். வழியில் தடுப்பவர்களை கொன்று தீர்க்கிறான். காட்சுமோட்டொ, தன் உயிரை எடுத்துக்கொள்ளாமல், தப்பிப்போவதே சிறந்தது என்று சொல்லும் ஆல்கிரெனுடன் காட்சுமோட்டோவுடன் வந்தவர்களும் இணைந்து தப்பிக்கிறார்கள்.
முன்பு தங்கியிருந்த மலைப்பிரதேசக் கிராமத்திற்குத் திரும்பி வரும் இவர்கள், போருக்கு ஆயத்தம் செய்கிறார்கள். பேரரசரின் இரண்டாயிரம் போர்வீரர்களை ஐநூறு சாமுராய் வீரர்களுடன் ஜெயிப்பதற்கு திட்டங்கள் தீட்டுகிறார்கள். இடையிடையே தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ளாமல், அடுத்த போரிற்குத்தயார் செய்யவேண்டும் என்றெல்லாம் ஆல்கிரென் சொல்கிறான்.
கடைசிப்போரும் நடக்கிறது. பேரரசரின் படைகளை சேதப்படுத்தினாலும், காட்சுமோட்டோவின் வீரர்களும் பலர் இறந்துவிடுகின்றனர். ஏறக்குறைய முப்பது வீரர்களே பாக்கியிருக்கும்போது துப்பாக்கிகளும், பீரங்கிகளும் நிறைந்த பேரரசர் படையினை எதிர்நோக்கி 100% சாவை எதிர்ப்பார்த்து, நடப்பது என்னவென்று தெரிந்துகொண்டே காட்சுமோட்டோவும், ஆல்கிரெனும், சாமுராய்களும் போகின்றனர். எதிர்ப்பார்த்தபடியே நார்நாராகக் கிழிபடுகின்றனர். சாமுராய் வீரர்களின் வீரத்தைக்கண்ட ஜப்பானிய காப்டன் சுடுவதை நிறுத்தச் சொல்கிறான். அதற்குள் ஆல்கிரெனும் காட்சுமோட்டோவுமே எஞ்சுகின்றனர். காட்சுமோட்டோ கத்தியைத் தருமாறு கேட்க எடுத்துக்கொடுக்கும் ஆல்கிரென் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறக்கும் காட்சுமோட்டோவை ஆரத்தழுவுகிறான்.
தோக்கியோவில், இன்னுமொரு மேற்கத்திய நாட்டுத்தூதுவரோடு உடன்படிக்கை ஒப்பந்தம் முடிவு செய்யும் நிலையில் ஆல்கிரென் உள் நுழைகிறான். காட்சுமோட்டோவின் மாணவனான பேரரசருக்கு காட்சுமோட்டோ தன் இறப்பின் மூலம் பழமையான ஜப்பானிய கலாச்சாரமே சிறந்தது, மக்களுக்கு ஏற்றது என்று சொல்கிறார். இதை ஆல்கிரென் பேரரசரிடன், தான் தூக்கிவந்திருக்கும் காட்சுமோட்டோவின் வாளை வைத்துக்கொண்டு சொல்லாமல் சொல்கிறான். உடன்படிக்கையை நிறுத்திய பேரரசர், தனக்கு வழிகாட்டிக்கொண்டிருந்த, சுயநலமாக செயல்பட்டுக்கொண்டிருந்த ஆலோசகரை நீக்குகிறார்.
பிறகு, அமெரிக்கரான ஆல்கிரெனிடம் தன் ஆசிரியர் எப்படி இறந்தார் என்று கேட்க ஆல்கிரெனோ ‘காட்சுமோட்டோ எப்படி வாழ்ந்தார் என்று சொல்கிறேன்’ என்று சொல்கிறார்.
Last Samurai (2003)

Tom Cruise, Ben Watanabe, Masato Harada, Schichinosuke Nakamura, Koyuki, Billy Connolly ஆகியோர் Edward Zwick இயக்கத்தில் நடித்திருக்கின்றனர்.
கதாநாயகனை விட மற்றவர்களெல்லாரும் அற்புதமாக வாழ்ந்து காட்டியிருக்கும் படம். நியூசீலாந்து 19ம் நூற்றாண்டு ஜப்பானிய மலைப்பிரதேசக் கிராமமாக மிளிர்கிறது. Glory, Courage under fire, The siege படங்களை இயக்கி, பல படங்களை உருவாக்கிய
Edward Zwick நன்றாக இயக்கியிருக்கிறார். அருமையான இசை, ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள் நிறைந்த இப்படத்தில் டாம் குரூஸைத் தவிர நெருஞ்சி முள்ளாய் நெருடும் இன்னொரு விஷயம் இருக்கிறது.
பண்டை நாகரீகமான ஜப்பானிய நாகரீகத்தின் பெருமையை ஜப்பானியர்களுக்கு மேற்கத்தியர் வந்து சொல்லித்தான் தெரியவேண்டுமா? இந்தப்படம் பற்றி ஜப்பானியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.
தன்னைத்தானே மாய்த்துக்கொள்வதும், ஜெயிக்கமுடியாத சூழலில் இருந்து விலகி, பிறகு பார்த்துக்கொள்வது பற்றியும் ஆல்கிரெனாக நடிக்கும் டாம் குரூஸ் பலமுறை சொல்லியும் படத்தின் கடைசிக்காட்சி எப்படி வந்தது/நடந்தது என்று புரிந்துகொள்ளமுடியவில்லை.
Update: Ken Watanabe won best supporting actor Oscar.





A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (